வாலிபர் தீக்குளித்து தற்கொலை


வாலிபர் தீக்குளித்து தற்கொலை
x

வாலிபர் தீக்குளித்து உயிரிழந்தார்

தூத்துக்குடி

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் சண்முகராஜ் (வயது 38). இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் மட்டும் கமலாபுரம் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் இருந்தபோது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தார். இதில் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story