விழுப்புரத்தில் பஸ் மோதி வாலிபர் பலி


விழுப்புரத்தில்    பஸ் மோதி வாலிபர் பலி
x

விழுப்புரத்தில் பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவர் நேற்று மாலை வீட்டுக்கு செல்வதற்காக விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பஸ் நிலையத்துக்குள் வந்த அரசு டவுன் பஸ் முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story