வாகனம் மோதி வாலிபர் சாவு


வாகனம் மோதி வாலிபர் சாவு
x

வாகனம் மோதி வாலிபர் இறந்தார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே வடகாடு கீழத்தூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் கண்ணதாசன் (வயது 28). இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து காரையூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருமயம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணதாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story