மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:45 PM GMT)

தட்டார்மடம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள பெரியதாழையை சேர்ந்த ஜெயக்குமார் மகன் அந்தோமி எடிசன் ரவிச்சந்திரன் (வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி பிரிந்து சென்றதால் அவரது தாயார் பிரேமிஷாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6-ந்தேதி இவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் மணிநகருக்கு சென்று கொண்டிருந்தார். படுக்கப்பத்து - காந்திநகர் சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திசையன்விளையிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story