விபத்தில் வாலிபர் சாவு


விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் வாலிபர் இறந்தார்.

சிவகங்கை

திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகம் ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ். சம்பவத்தன்று இவர் மடப்புரத்தில் இருந்து ஏனாதிக்கு மோட்டார்சைக்கிளில் நண்பர்களான ரமேஷ் (வயது 25), முனீஸ்வரன் (25) ஆகியோருடன் மஞ்சள்குடி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி கீழே கவிழ்ந்தது. இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். பலத்த காயமடைந்த முனீஸ்வரனை சிகிச்கைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story