மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
x

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் கணேசபுரத்தை சேர்ந்தவர் பூபதிராஜா. இவருடைய மகன் பாலஅருண் (வயது 18). இவர் கடந்த 26-ந் தேதி அந்த பகுதியில் உள்ள நண்பர்களை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவர் ராம்தாஸ்நகர் பகுதியில் வந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாலஅருண் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலஅருண் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story