விபத்தில் வாலிபர் படுகாயம்


விபத்தில் வாலிபர் படுகாயம்
x

விபத்தில் வாலிபர் படுகாயம்

விருதுநகர்

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு தெற்குத் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 20).இவர் நேற்று காலை சிவகாசிக்கு இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சுந்தரபாண்டியம் விலக்கு அருகில் வந்தபோது, அந்த வழியாக சென்ற தனியார் பஸ்சும், இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதின. இதில் விக்னேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பஸ்சில் இருந்தவர்கள், அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story