திருவள்ளூர் அருகே ரெயில் மோதி வாலிபர் சாவு - யார் அவர்? போலீசார் விசாரணை


திருவள்ளூர் அருகே ரெயில் மோதி வாலிபர் சாவு - யார் அவர்? போலீசார் விசாரணை
x

திருவள்ளூர் அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு- திருநின்றவூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. அவர் வெள்ளை நிறத்தில் முழுக்கை சட்டையும், நீல நிறத்தில் வெள்ளை கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரித்து வருகின்றனர்.


Next Story