கார் மோதி வாலிபர் பலி


கார் மோதி வாலிபர் பலி
x

கார் மோதி வாலிபர் பலி

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள செவரக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் (வயது 33), முருகன் (35). இருவரும் ஆத்தங்குடியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தனர் நேற்று பேக்கரியில் வேலையினை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் செவரக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். செவரக்கோட்டைவிலக்கு அருகே அந்த வழியாக வந்த கார் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முருகன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story