சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு


சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
x

சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தத.

கரூர்

தவிட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் கோவிலும் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதேபோல் தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் உள்ள கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் தங்களது நகைகளை பூஜையில் கொடுத்து திரும்பி வாங்கி கொண்டனர்.

1 More update

Next Story