கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு


கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
x

கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

கரூர்

தேய்பிறை அஷ்டமியையொட்டி நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் உள்ள சொர்ண பைரவர் கோவிலில் சுவாமிக்கு பால் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் தங்கள் அணிந்திருந்த நகைகளை பூஜையில் கொடுத்து பின்னர் திரும்ப பெற்று கொண்டனர்.


Next Story