ஆடி மாத சஷ்டியையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆடி மாத சஷ்டியையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 July 2023 7:00 PM GMT (Updated: 23 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

ஆடி மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

பாலதண்டாயுதபாணி சாமி

ஆடிமாத சஷ்டியையொட்டி நேற்று நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. நாமக்கல்- மோகனூர் சாலை காந்தி நகரில் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இங்கு சாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

வடபழனியாண்டவர் கோவில்

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி கோவில், பரமத்தி அருகே பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுக கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.

இதேபோல் நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சாமி கோவில், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.


Next Story