நல்லம்பள்ளி அருகேமாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


நல்லம்பள்ளி அருகேமாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 2 May 2023 12:30 AM IST (Updated: 2 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் மாசாணியம்மன், முத்து மாரியம்மன், துர்காளியம்மன் கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மூலவர் சாமிகள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நாளில் யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் மாசாணியம்மன், முத்துமாரியம்மன், துர்காளியம்மன் கோவில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் சாமிகளுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை அர்ச்சகர்கள் நடத்தினர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story