சேவூர் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


சேவூர் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
x

சேவூர் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்பூர்

சேவூர்

சேவூர் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

கோவை திருப்பூர் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதும் "மேலத்திருப்பதி" எனப் போற்றப்படுவதுமான மொண்டிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் கோவில் தை தேர்த்திருவிழா கடந்த கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள், திருவீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் ரத தரிசனம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "கோவிந்தா...கோவிந்தா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பகல் 2 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேவூர் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

பரிவேட்டை, தெப்பத்தேர்

விழாவில் இன்று (சனிக்கிழமை) பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மகா திருமஞ்சனம், மகா தரிசனம், கொடிஇறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது.தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story