சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழா: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்


சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழா: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
x
தினத்தந்தி 12 Aug 2023 7:00 PM GMT (Updated: 12 Aug 2023 7:01 PM GMT)

சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த பந்தயத்தில் மாட்டுவண்டிகள் சீறிப்பாய்ந்தன.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த பந்தயத்தில் மாட்டுவண்டிகள் சீறிப்பாய்ந்தன.

மாட்டுவண்டி பந்தயம்

சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டையில் உள்ள சடையாண்டி சுவாமி ஆடி பூஜை திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பிரான்மலை- சிங்கம்புணரி சாலையில் நடு மாடு, சின்னமாடு என 2 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.

இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் நடுமாடு பிரிவில் 8 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 13 ஜோடிகளும் கலந்து கொண்டன. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 21 மாட்டுவண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன.

நடுமாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறிப்பாய்ந்து சென்ற மாட்டுவண்டி சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

பரிசுகள்

சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதலாவதாக கொன்னப்பட்டி ரமேஷ், 2-வதாக கள்ளந்திரி முருகன், 3-வதாக அழகாபுரி கிடாரிப்பட்டி சோலைச்சாமி கோகிலன், 4-வதாக மேலூர் வள்ளாளப்பட்டி அமல் ஆத்விக் பதினெட்டாம் படி கருப்பர் அணி வெற்றி பெற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக அவனியாபுரம் எஸ்.கே.ஆர் வண்டியும், 2-ம் பரிசு அவனியாபுரம் பசும்பொன் வண்டியும், 3-வதாக சத்திரப்பட்டி வண்டியும், 4-வது முத்துப்பட்டி வேப்பங்குளம் முனியாண்டி சாமி வண்டியும் வெற்றி பெற்றது.


Next Story