கோவில்களை இந்து அமைப்புகளிடம் டெண்டர் கோரிய ஒப்படைக்க முடியும் - அமைச்சர் சேகர்பாபு


கோவில்களை இந்து அமைப்புகளிடம் டெண்டர் கோரிய ஒப்படைக்க முடியும் - அமைச்சர் சேகர்பாபு
x

கோவில்களை இந்து அமைப்புகளிடம் டெண்டர் கோரிய ஒப்படைக்க முடியும் என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

இந்து அமைப்புகளிடம் இருக்கும் போது கோவில்கள் எவ்வளவு பராமரிக்கப்படும், அதைவிட கூடுதலாக அக்கறை கொண்டு தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

கோவில்களை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால், எந்த இந்த அமைப்புகளிடம் எந்த கோவிலை, டெண்டர் கோரியா ஒப்படைக்க முடியும்.

எனவே அது சாத்தியம் இல்லாதது. மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோவிலாக இருந்தாலும் மன்னர் வழிவந்து, அதன்பின்னர் மக்களாட்சி வந்த பிறகு மக்களாட்சியில் இருக்கின்ற அரசுக்குத்தான் கோவிலின் உரிமை உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story