தென்காசி: குற்றாலம் அருவி அருகே, 40-க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து.!


தென்காசி: குற்றாலம் அருவி அருகே, 40-க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து.!
x

குற்றாலம் அருவி அருகே, 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலம் பஜார் பகுதியில் சீசனுக்காக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், அந்த கடைகளில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், விரைவாக கடைகளில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தால் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிலிண்டர் வெடித்ததால் குற்றாலம் பஜார் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Next Story