ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்


ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
x
தினத்தந்தி 7 Aug 2023 6:45 PM GMT (Updated: 7 Aug 2023 6:45 PM GMT)

கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, இரவில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கடந்த 4-ந்தேதி செடல் உற்சவம், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடைபெற்றது. மாலையில் வன்னியர் குலசத்திரியர்கள் பொது உற்சவமான, தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story