விழுப்புரம் கோர்ட்டில் ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்


விழுப்புரம் கோர்ட்டில் ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:46 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம் மீண்டும் நாளை விசாரணை

விழுப்புரம்

விழுப்புரம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சியான சேலம் மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டும் தற்போது ஓய்வு பெற்றவருமான குணசேகரன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி புஷ்பராணி இவ்வழக்கின் விசாரணையை மீண்டும் 29-ந் தேதி(நாளை) நடைபெறும் என உத்தரவிட்டார்.


Next Story