கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந் திருவிழா..!


கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந் திருவிழா..!
x
தினத்தந்தி 3 July 2022 4:06 AM GMT (Updated: 3 July 2022 4:29 AM GMT)

நெல்லையப்பர் கோவில் 516-வது ஆண்டு ஆனித்தேரோட்டம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நெல்லை:

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆனித்தேரோட்டம் சிறப்பு பெற்றது. 516-வது ஆண்டு ஆனித்தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி காலை 7.40 மணிக்கு சுவாமி -அம்மாள் பூக்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது

ஆனித்திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை )நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு நடக்கும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.


Next Story