குன்னூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த 62-வது பழக் கண்காட்சி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 62-வது பழக் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த கண்காட்சியில் 3 டன் அளவிலான 25 வகை பழங்களைக் கொண்டு பல்வேறு வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தோட்டக்கலைத்துறை சார்பில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தாஜ்மகால், கோவில் தேர் போன்ற பல்வேறு வடிவமைப்புகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





