என் வீட்டில் நிகழ்ந்த தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது - திமுக எம்.பி., திருச்சி சிவா


என் வீட்டில் நிகழ்ந்த தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது - திமுக எம்.பி., திருச்சி சிவா
x
தினத்தந்தி 16 March 2023 9:27 AM GMT (Updated: 16 March 2023 12:20 PM GMT)

என் வீட்டில் நிகழ்ந்த தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று திமுக எம்.பி., திருச்சி சிவா கூறினார்.

திருச்சி,

தாக்குதல் சம்பவம் தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பஹ்ரைன் சென்று இருந்தேன். நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போது நான் எதையும் பேசுகிற மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை.

நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். தனி மனிதனை விட இயக்கம் பெரிது…. கட்சி பெரியது… என்று எண்ணுபவன் நான். தற்போது நடந்துள்ள நிகழ்வுகள் மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. நான் ஊரில் இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி காயமடைந்துள்ளார். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. கடுமையான மன சோர்வில் உள்ளேன். மனச் சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story