குளக்கரையில் தொழிலாளி பிணம்

ராதாபுரத்தில் குளக்கரையில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.
ராதாபுரம்:
ராதாபுரம் பாவேந்தர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 47), தொழிலாளி. இவர் நேற்று மாலையில் ராதாபுரம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள குளக்கரையின் தடுப்பு சுவரில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ராதாபுரம் போலீசார் விரைந்து சென்று, அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தாரா? அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





