கலசபாக்கம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி


கலசபாக்கம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
x

கலசபாக்கம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா குலால்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36), மேஸ்திரி. அவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள். இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதனையடுத்து அவர் பிரசவத்திற்காக கலசபாக்கத்தை அடுத்த நார்த்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார். அவருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது.

கார்த்திகேயனின் 2-வது மகன் கோபிநாத் (2) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென கோபிநாத் மாயமாகியுள்ளான். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர். அப்போது குளத்தில் கோபிநாத் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சாவு

உடனே சிறுவனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுவன் இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கலசபாக்கம் போலீசில், குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story