புதுப்பெண் மாயம்


புதுப்பெண் மாயம்
x

புதுப்பெண் மாயமானார்.

அரியலூர்

தா.பழூர் அருகே உள்ள கண்டியங்கொல்லை ஓடைக்கார தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 57). இவரது மகள் சுமித்ராவை(26) தேவாமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் சரவணனுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொடுத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமித்ரா, தனது தந்தை வீடான பாண்டியன் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று மதியம் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பாண்டியன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து சுமித்ராவை தேடி வருகிறார்.

1 More update

Next Story