கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விக்கிரவாண்டி தாலுகா ஆர்.சி. மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்தவர் லாசர் ஷர்மா மகன் ஜான்போஸ்கோ (வயது 31). இவர் மீது திண்டிவனம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக ஜான்போஸ்கோவை திண்டிவனம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இவரின் இத்தகைய செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதையடுத்து ஜான்போஸ்கோவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் ஜான்போஸ்கோவை நேற்று திண்டிவனம் போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story