செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 164 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் விபத்து நிவாரண உதவித்தொகையாக 3 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகையும், இயற்கை மரணமடைந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.5½ லட்சம் உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார். மேலும், மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அஞ்சல் வழியாக அனுப்பி வைத்திடும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் 11 பயனாளிகளுக்கான மின்னணு குடும்ப அட்டையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாகிதா பர்வின், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story