கலவையில் 52.2 மில்லி மீட்டர் மழை பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலவையில் 52.2 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் வெப்பம் தணிந்துள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நீர்வரத்து கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கலவையில் 52.2 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ராணிப்பேட்டை-40.4, ஆற்காடு-40.2, காவேரிப்பாக்கம்-11, பனப்பாக்கம்-11.2, வாலாஜா-31.7, அம்மூர்-30, பாலாறு அணைக்கட்டு-28.2, சோளிங்கர்-2.
Related Tags :
Next Story






