காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் நேற்று இரவு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் பழங்குடி இன பெண்களை மானபங்கம் செய்த செயலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன், சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story