படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு


படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
x

நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புதுக்கோட்டை

அண்டக்குளம் அருகே வைத்திக்கோவிலை சேர்ந்தவர் சரவணன் (வயது 37). இவர், நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சாலையின் குறுக்கே நாய் வந்தது. அப்போது நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் நிலைதடுமாறி சரவணன் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சரவணன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story