சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த சாலை

திருமருகல் ஒன்றியம் வீச்சூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிடாமங்கலம் பாலம் முதல் குரும்பூர், வீச்சூர், மருதாவூர், சித்தாம்பூர் சாலை வழியே நன்னிலம் ஒன்றியத்தை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை.

மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த சாலை வழியாக கணபதிபுரம் வந்து அங்கிருந்து பூந்தோட்டம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருநள்ளாறு, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வந்தனர்.

மின் விளக்குகள் இல்லை

அதேபோல் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச்செல்வதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீச்சூர் செல்லும் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படும் அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story