பிணமாக கிடந்த முதியவர்

ஆம்பூர் பைபாஸ் சாலையில் முதியவர் பிணமாக கிடந்தார்.
ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் ஆம்பூர் இந்திரா நகர் முதல் வீதியை சேர்ந்த எல்லப்பன் (வயது 69) என்பது தெரியவந்தது. மேலும் இதுதொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





