தருமபுரியில் இருந்து தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட குட்டியானை உயிரிழப்பு !


தருமபுரியில் இருந்து தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட குட்டியானை உயிரிழப்பு !
x

முதுமலை தெப்பக்காடு முகாமில் குட்டியானைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி,

தருமபுரியில் தாயை பிரிந்த 3 மாத குட்டியானை ஒன்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது.

இந்த யானைக்குட்டியை முதுமலை வன ஊழியர்களும், ஆஸ்கார் வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் - பொள்ளி தம்பதியினரிடம் கொடுத்து வளர்க்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், முதுமலை தெப்பக்காடு முகாமில் குட்டியானைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் குட்டியானை உயிரிழந்தது.


Next Story