கிணற்றில் டிராக்டரோடு விழுந்து டிரைவர் சாவு


கிணற்றில் டிராக்டரோடு விழுந்து டிரைவர் சாவு
x
தினத்தந்தி 26 Sep 2023 7:30 PM GMT (Updated: 26 Sep 2023 7:30 PM GMT)

கிணற்றில் டிராக்டரோடு விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:-

பென்னாகரம் அருகே தாசம்பட்டி கிராமத்தை சேர்ந்த மயில்சாமி மகன் விஜயகுமார் (வயது 38). டிராக்டர் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். பிக்கிலி ஊராட்சி ஊத்துக்கொள்ளை கிராமத்தில் கிணறு தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் டிராக்டர் வைத்து பாறையில் துளை போடுவதற்கான பணியில் விஜயகுமார் ஈடுபட்டு இருந்தார். வெடி மருந்து நிரப்பி வைப்பதற்காக டிராக்டரை தூரமாக விஜயகுமார் ஓட்டி சென்றார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் பாதை ஓரமாக இருந்த 30 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது. இதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி கிணற்றுக்குள் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story