இரும்பு கடையில் திருடிய டிரைவர் கைது


இரும்பு கடையில் திருடிய டிரைவர் கைது
x

பழனியில், இரும்பு கடையில் திருடிய சரக்கு வேன் டிரைவர் கைது செய்யப்பட்டர்.

திண்டுக்கல்

பழனி கோட்டைமேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஹபீப்ரகுமான் (வயது 36). இவர், பழனி இட்டேரிசாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார். அவருடைய கடையில், பழனி சத்யாநகரை சேர்ந்த பெரியண்ணா (21) என்பவர் சரக்கு வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடையில் இரும்பு பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து ஹபீப்ரகுமான் பழனி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் டிரைவர் பெரியண்ணா, கடையில் இருந்து இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story