கல்வி அதிகாரம் முழுவதையும் மாநில அரசுக்கே வழங்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி


கல்வி அதிகாரம் முழுவதையும் மாநில அரசுக்கே வழங்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி
x

கல்வி அதிகாரம் முழுவதையும் மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

இந்தியை கட்டாயப்படுத்துவதை ஆரம்பத்தில் இருந்தே நாம் எதிர்த்தோம். மாநிலத்திற்கு முழுமையாக கல்வி அதிகாரத்தை கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். புதிய கல்விக்கொள்கை குறித்து முதல்-அமைச்சர் ஒரு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் பலவற்றை நாம் எதிர்க்கிறோம். குறிப்பாக, 3, 5, 8-ம் வகுப்புக்கெல்லாம் பொதுத்தேர்வு உள்ளது. அவ்வாறு பொதுத்தேர்வு வைத்தால் இடைநிற்றல் அதிகமாகும். எனவேதான் வேண்டாம் என்கிறோம். தற்போது, பட்டப்படிப்புக்கும் நுழைவுத்தேர்வு என்பதை நாம் முழுமையாக எதிர்க்கிறோம் என்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story