விபத்தில் விவசாயி பலி


விபத்தில் விவசாயி பலி
x
தினத்தந்தி 7 Jun 2023 7:00 PM GMT (Updated: 7 Jun 2023 7:00 PM GMT)

சங்கரன்கோவில் அருகே விபத்தில் விவசாயி பலியானார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சிவகிரி அருகே உள்ள உள்ளார் தளவாய்புரத்தை சேர்ந்தவர் ராமர் பாண்டி (வயது 65). விவசாயியான இவர் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்.

சங்கரன்கோவில் அடுத்த ஆனையூர் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் இருந்து ராமர் பாண்டி தவறி விழுந்து காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கிருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமர் பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story