மரக்கிளையை வெட்டிய போது தவறி விழுந்த விவசாயி சாவு


மரக்கிளையை வெட்டிய போது தவறி விழுந்த விவசாயி சாவு
x

மரக்கிளையை வெட்டிய போது தவறி விழுந்த விவசாயி இறந்தார்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47). விவசாயி. இவர் தனது வீட்டின் முதல் மாடியில் நின்று கொண்டு வேப்பமரத்தின் கிளையை வெட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரமேஷின் மனைவி ஷீலா ராணி கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story