நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா


நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
x

நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட நெல்லை மண்டலம் 18-வது வார்டு பேட்டை சாஸ்திரி நகர் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார். விழாவில் நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பைஜூ, உதவி பொறியாளர் பட்டுராஜன், பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரூபராணி, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story