பாம்பு கடித்து சிறுமி சாவு


பாம்பு கடித்து சிறுமி சாவு
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:45 PM GMT)

பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்தார்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஊராட்சி கருவேல்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தேவி (வயது 16). தேவி 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர்கள் அங்குள்ள அண்ணாநகர் தோப்பு வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று அதிகாலை தேவி வயல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதில் மயக்கமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் ்மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story