குளத்தில் மூழ்கி சிறுமி பலி


குளத்தில் மூழ்கி சிறுமி பலி
x

ஈத்தாமொழி அருேக குளத்தில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

ராஜாக்கமங்கலம்:

ஈத்தாமொழி அருேக குளத்தில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

குளிக்க சென்றவர்

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பருத்திவிளையை சேர்ந்தவர் ஜலீலுல்லா, வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சஹீனா (வயது28). இவர்களது மகள் ரஹீமா (9). நேற்று முன்தினம் மதியம் சஹீனா, தனது மகள் ரஹீமா மற்றும் உறவினர்களுடன் ஈத்தாமொழி அருகே உள்ள சம்பகுளத்திற்கு குளிக்க சென்றார். அவர்கள் குளித்துக்கொண்டிருந்த போது சிறுமி ரஹீமா ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

இதனை கண்ட சஹீனா மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுமியை மீட்டனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார்.

பரிதாப சாவு

உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் சஹீனா அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story