பெண் மாயம்

பெண் மாயமானார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் கள்ளர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி செல்வி. நாகராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் ரேஷ்மா(வயது 23) பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர், சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லை என்று கூறி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்று வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில், செல்வி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





