பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயமானார்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 57). இவரது மகள் கவுசல்யா (33). இவரை காரைக்காட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கவுசல்யா கூத்தங்குடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார். கடந்த 3-ந் தேதி காலை தா.பழூர் அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் தனபால் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவை தேடி வருகிறார்.


Next Story