சிறுமி மாயம்


சிறுமி மாயம்
x

சிறுமி மாயமானார்.

அரியலூர்

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், கோப்பிலியன்குடிகாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடும்பத்துடன் ரமேஷ் அயன் ஆத்தூரில் வசித்து வருகிறார். ரமேஷின் மூத்த மகள் சரண்யா (வயது 18), ஆனந்தாவாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்த இவர், வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதியன்று சரண்யாவை காணவில்லை. இதையடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் சரண்யா கிடைக்கவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீசில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிந்து மாயமான சரண்யாவை தேடி வருகிறார்.


Related Tags :
Next Story