சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் அவர் 39 வயதான ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் ரமேஷ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ெசய்து ரமேசை கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





