சிறுமிக்கு பாலியல் தொல்லை


சிறுமிக்கு பாலியல் தொல்லை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி நேரு நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 37), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் யாரிடமும் இதுகுறித்து தெரிவிக்க கூடாது என்று மிரட்டி உள்ளார். அதனால் பயந்துபோன சிறுமி பாலியல் தொல்லை குறித்து பெற்றோரிடம் கதறி அழுதபடி கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் கணேசனை கைது செய்தார்.

கணேசனுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story