விபத்தில் காயமடைந்தவர் சாவு


விபத்தில் காயமடைந்தவர் சாவு
x

மானூர் அருகே விபத்தில் காயமடைந்தவர் இறந்தார்.

திருநெல்வேலி

மானூர்:

பாளையங்கோட்டையை அடுத்த டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜான் செல்வராஜ் (வயது 54). இவர் கடந்த 15-ந் தேதியன்று சங்கரன்கோவில் - நெல்லை மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் மானூர் அருகே மாவடி விலக்கு பகுதியில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் மோதியதில் ஜான் செல்வராஜ் கீழே விழுந்து காயம் அடைந்தார். தொடர்ந்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story