ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற விசாரணை கைதி தப்பி ஓட்டம்


ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற விசாரணை கைதி தப்பி ஓட்டம்
x

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற விசாரணை கைதி தப்பி ஓட்டம்

தஞ்சாவூர்

தஞ்சை வெண்ணாற்றங்கரையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சம்பவத்தன்று ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த உமா என்பவர் தனது உறவினர்களுடன் வந்தார். அப்போது காவி வேட்டி அணிந்த மர்மஆசாமி ஒருவர் உமாவை பின்தொடர்ந்து சென்றார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு கோவிலைவிட்டு வெளியே வந்த உமாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை மர்மஆசாமி பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார். இதனால் அசிர்ச்சி அடைந்த உமா, திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு கோவிலில் இருந்த பக்தர்கள் விரைந்து வந்து அந்த மர்மஆசாமியை பிடித்து அடித்து நகையை பிடுங்கினர். பின்னர் அவரை தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.அவர் சொன்ன தகவல்கள் எல்லாம் பொய்யாகவே இருந்தது. மேலும் அவர் காயம் அடைந்து இருந்ததால் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அந்த நபர் நேற்றுகாலை ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story