சிறுமி மாயம்


சிறுமி மாயம்
x

சிறுமி மாயமானார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சப்பன். இவரது மனைவி தேவி(வயது 43). இவர்களது மகள் அனுசியா(17). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கினார். நேற்று காலை பார்த்தபோது அனுசியாவை காணவில்லை. இதனால் உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் அவரை அஞ்சப்பன் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் தேவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அனுசியாவை தேடி வருகின்றனர்.


Next Story