சின்னமனூர் அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலி

சின்னமனூர் அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த சிறுமி பலியானாள்.
தேனி
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 41). இவருக்கு 2 மகன்களும், கீர்த்தனா (10) என்ற மகளும் இருந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று கீர்த்தனா வீட்டின் படிக்கட்டில் ஏறினாள். அப்போது அவள் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தாள். அப்போது கீழே பானையில் வைத்திருந்த சுடுதண்ணீரும் அவள் மீது பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவளை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா இறந்தாள். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






